தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு; விபரம் இதோ!

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, விழுப்புரத்தில் 55 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வானிலை நிலவரம் மாறி மாறி காணப்படுகிறது. காலையில் வெயில் கொளுத்தி எடுத்தும், மதியத்திற்கு பிறகு மழை பெய்வதுமாக இருக்கிறது.

குறிப்பாக தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மற்றும் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வந்தது.

தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் இன்று (மார்ச் 24) காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விபரம் ( மில்லி மீட்டரில்)


விழுப்புரம்- 55


ராஜபாளையம்-33

குண்டேரிப்பள்ளம்-27


பர்லியார்- 24


குன்னூர்-22


கூடலூர்-16


தஞ்சாவூர்-13


சோளிங்கர்-12

பந்தலூர் தாலுகா அலுவலகம் -12



செம்மேடு-9.8


செஞ்சி-9.5

Advertisement