238ம் இடத்துக்கு தள்ளப்பட்ட புதுச்சேரி பொறியியல் கல்லுாரி முதல்வர் ரங்கசாமி அதிருப்தி
புதுச்சேரி : சட்டசபை கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்.
கல்யாணசுந்தரம் (பா.ஜ.,): புதுச்சேரி இன்ஜினியரிங் கல்லுாரி தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது.
ஆனால், 8ம் இடத்தில் இருந்த இக்கல்லுாரி இன்று 238 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்லுாரியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும். துணைவேந்தருக்கு அதிகாரமா, அமைச்சருக்கு அதிகாரமா என்ற அதிகார போட்டி தான் நடந்து கொண்டு இருக்கிறது. இக்கல்லுாரியை உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
186 ஏக்கர் விவசாய நிலத்தை அப்பகுதி மக்கள் இக்கல்லுாரிக்கு கொடுத்துள்ளனர். ஆனால் அவர்களுக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கவில்லை.
முதல்வர் ரங்கசாமி: இது உண்மை தான். வரும் காலத்தில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தினை சிறந்த பல்கலையாக மாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அங்கு என்ன பிரச்னை உள்ளது என்பதை அரசு முழுமையாக கண்டறிந்து தீர்க்கப்படும்.
மேலும்
-
சிந்திக்க விடுமா இந்த கூட்டம்?
-
'டவுட்' தனபாலு
-
பழமொழி: ஆழ்கடல் நீச்சல் அடிக்கத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் ஆழம்.
-
சர்ச்சை மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்?
-
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர், தாய்லாந்து மக்களுக்காக போப் பிரார்த்தனை
-
பைக்கில் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்; அணியாத 12 ஆயிரம் பேருக்கு அபராதம்