தி.மு.க., கொடியை அகற்ற தலைமை உத்தரவு; அகற்றிய போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தி.மு.க., கொடி கம்பம் அகற்றும் போது மின்சாரம் தாக்கி ராமமூர்த்தி என்பவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் படி தமிழகத்தில் தேசிய, மாநில, உள்ளாட்சி அமைப்பு ரோடுகளில் உள்ள தங்கள் கட்சி கொடி கம்பங்களை அகற்ற தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்தி இருந்தார்.
பொது இடங்களிலும் வைத்துள்ள தி.மு.க., கொடிக் கம்பங்களை, தாங்களே முன்வந்து, 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். அகற்றப்பட்ட கொடிக் கம்பங்களின் விபரங்களை, கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று துரை முருகன் உத்தரவிட்டுள்ளார். இதனால் கட்சி கொடியை அகற்று பணி நடந்து வருகிறது.
அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தி.மு.க., கொடி கம்பம் அகற்றும் போது மின்சாரம் தாக்கி ராமமூர்த்தி என்பவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், கேத்து நாயக்கன்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் ( 58 ) பெருமாள் (46) முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன் (50) உட்பட 5 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யார் இந்த ராமமூர்த்தி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள கேத்து நாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (50). இவர் கேத்துநாய்க்கன்பட்டி தி.மு.க., கிளைக் கழக செயலாளராக பணியாற்றி வந்தார்.
பொது இடத்தில் உள்ள தி.மு.க., கொடிக்கம்பத்தை அகற்றும் பணியில் திமுகவினர் இன்று காலை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது கொடிக்கம்பம் எதிர்பாராத விதமாக மின்சார கம்பி மீது சாய்ந்தது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் ராமமூர்த்தி (50) உயிரிழந்தார்.












மேலும்
-
மாயமான பிளஸ் 1 மாணவர் கிணற்றில் சடலமாக மீட்பு
-
மாற்றுத்திறன் மனைவி தாக்கு கணவர், கொழுந்தன் கைது
-
பாலினம் கண்டறியும் கருவியுடன் காரில் சுற்றிய 3 பேர் கைது
-
பாலினம் கண்டறியும் கருவியுடன் காரில் சுற்றிய 3 பேர் கைது
-
கே.ஆர்.எஸ்., அணையின் ஒரு மதகு திடீர் திறப்பு; 24 மணி நேரத்தில் 2,000 கன அடி நீர் வெளியேற்றம்
-
முதல்வர் இல்லம் ஏப்., 15ல் முற்றுகை