மாற்றுத்திறன் மனைவி தாக்கு கணவர், கொழுந்தன் கைது
விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அருகே மாற்றுத்திறனாளி மனைவியை தாக்கிய கணவரும், அவரது தம்பியும் கைது செய்யப்பட்டனர்.
விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி காலனி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் மனைவி தனலட்சுமி, 38. மாற்றுத்திறனாளி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
தனலட்சுமிக்கும், கணவரின் சகோதரர் மணிகண்டன் வீட்டிற்கும் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் படுத்திருந்த தனலட்சுமியை, கணவர் முருகன், கொழுந்தனார் மணிகண்டன் இருவரும் ஆபாசமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். தனலட்சுமி புகாரின் பேரில், மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் பாண்டிசெல்வி தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து, முருகன், 42, மணிகண்டன், 35, இருவரையும் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.200 கோடி வரி ஏய்ப்பை கண்டுபிடிக்க உதவிய வாட்ஸ் அப் செயலி: நிர்மலா சீதாராமன்
-
வீடு வீடாக சென்று போதைப்பொருள் பயன்படுத்துவோர் கணக்கெடுப்பு: பஞ்சாப் அரசின் புது திட்டம்
-
அமித்ஷா மீது உரிமை மீறல் தீர்மானம்: காங்கிரஸ் நோட்டீஸ்
-
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் அறிவுரை
-
கண்காட்சி போட்டி: இந்தியா வருகிறார் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி
-
தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு இ.பி.எஸ்., பதில்
Advertisement
Advertisement