பைக்கில் புகுந்த பாம்பு மீட்பு
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் பைக்கில் புகுந்து அச்சுறுத்திய பாம்பை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த செம்மணங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம், 45; விவசாயி. இவர், ஸ்பிளண்டர் பைக்கை, உளுந்துார்பேட்டை நாராயணன் தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள கடையில் நிறுத்தி விட்டுச் சென்றார்.
நேற்று மாலை 4:00 மணியளவில் வந்து பார்த்தபோது. பைக்கின் முன் பகுதியில் இரண்டடி நீளமுள்ள பாம்பு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
தகவல் அறிந்த உளுந்துார் பேட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, பைக்கில் அச்சுறுத்திய விஷத்தன்மை யற்ற பாம்பை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருப்பணி செய்ய சொல்லு எம்பெருமானே...
-
தனிப்பட்ட மருத்துவ சான்று இனி கொடுக்க முடியாது!
-
பள்ளிவாசல்களில் ரம்ஜான் 27ம் இரவு சிறப்பு நிகழ்ச்சி
-
திருடனாய் பார்த்து தான் திருந்த வேண்டும்! பாலிதீன் பயன்பாடு குறித்து மேயர் கருத்து
-
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம் 39 ஆயிரத்து 105 மாணவர்கள் பங்கேற்பு
-
சட்ட விழிப்புணர்வு
Advertisement
Advertisement