ஓட்டல் பூட்டுடைத்து ரூ.1.50 லட்சம் திருட்டு
கோவை; கோவை, சிங்காநல்லூர் அருகே நீலிகோணாம்பாளையம் ஆர்.கே.கே. நகரை சேர்ந்தவர் பாபு, 52. அதே பகுதியில் கடந்த, 7 ஆண்டுகளாக ஓட்டல் நடத்தி வருகிறார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். தினமும் காலை 6:00 மணிக்கு ஓட்டலை திறந்து இரவு, 11:00 மணிக்கு பூட்டுவது வழக்கம்.
நேற்று முன்தினம் காலை, பாபு ஓட்டலை திறக்க சென்றார். அப்போது ஷட்டர் கதவு பாதி திறந்து கிடந்தது. கல்லாவில் இருந்த ரூ.1.50 லட்சம் பணம் திருட்டு போயிருந்தது.
பாபு அளித்த புகாரின் பேரில், சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தனிப்பட்ட மருத்துவ சான்று இனி கொடுக்க முடியாது!
-
பள்ளிவாசல்களில் ரம்ஜான் 27ம் இரவு சிறப்பு நிகழ்ச்சி
-
திருடனாய் பார்த்து தான் திருந்த வேண்டும்! பாலிதீன் பயன்பாடு குறித்து மேயர் கருத்து
-
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம் 39 ஆயிரத்து 105 மாணவர்கள் பங்கேற்பு
-
சட்ட விழிப்புணர்வு
-
குண்டம் தேர்த்திருவிழா ஆயக்கால் நட்டு பூஜை
Advertisement
Advertisement