போக்சோ வழக்கில் வாலிபருக்கு சிறை

கோவை; போக்சோ வழக்கில், வாலிபருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து, கோவை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

கோவை, குனியமுத்துாரை சேர்ந்தவர் சுதர்சன்,28. இவர், 15 வயதுடைய சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து, 2020, அக்., 22ல் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக, கோவையிலுள்ள முதன்மை போக்சோ கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றம் சாட்டப்பட்ட சுதர்சனத்திற்கு, மூன்றாண்டு சிறை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

Advertisement