புதுச்சேரி மதுபானம் கடத்திய நான்கு பேர் கைது
செங்கல்பட்டு, : அச்சிறுபாக்கம் பகுதியில், புதுச்சேரி மதுபானங்களை கடத்தி வந்த மூன்று பெண்கள் உட்பட நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.
மதுராந்தகம் காவல் துணை கோட்டத்திற்கு உட்பட்ட அச்சிறுபாக்கம், சூணாம்பேடு, மணப்பாக்கம், வேலுார் ஆகிய கிராமங்களில், புதுச்சேரி மதுபானம் விற்பனை அதிகமாக நடைபெறுவதாக, மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மற்றும் அச்சிறுபாக்கம் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை உதவி கமிஷனர் ராஜன்பாபு, தாசில்தார் ராஜேந்திரன் மற்றும் அச்சிறுபாக்கம் மதுவிலக்கு போலீசார், நேற்று முன்தினம் சூணாம்பேடு பகுதியில், திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, சூணாம்பேடு இணியவன், 43, ரூபாவதி, 36, மணப்பாக்கம் வெண்ணிலா, 50, வேலுார் அஞ்சலை, 45, ஆகியோரை மடக்கிப் பிடித்து சோதனை செய்த போது, புதுச்சேரி மதுபானம் 82 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து, அச்சிறுபாக்கம் மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நான்கு பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
திட்டமிட்ட உள்நோக்கத்துடன் அவதுாறு: அமெரிக்க அமைப்பின் அறிக்கைக்கு இந்தியா கண்டனம்!
-
சிறுவர்களால் நிகழும் சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம்; அதிர்ச்சி தகவல்
-
தந்தை, மகளை சுட்டுக் கொன்ற வாலிபர் தற்கொலை!
-
ரூ.200 கோடி வரி ஏய்ப்பை கண்டுபிடிக்க உதவிய வாட்ஸ் அப் செயலி: நிர்மலா சீதாராமன்
-
வீடு வீடாக சென்று போதைப்பொருள் பயன்படுத்துவோர் கணக்கெடுப்பு: பஞ்சாப் அரசின் புது திட்டம்
-
அமித்ஷா மீது உரிமை மீறல் தீர்மானம்: காங்கிரஸ் நோட்டீஸ்