காஞ்சியில் நாளை மின் குறைதீர் கூட்டம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், நான்காவது வியாழக்கிழமைதோறும், காஞ்சிபுரம் தெற்கு மின் நுகர்வோர் குறை தீர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.

அதன்படி, காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை, காலை 11:00 மணிக்கு, தெற்கு மின் நுகர்வோர் குறை தீர்வு கூட்டம் நடைபெறும்.

குறை தீர் கூட்டத்தில், மின் நுகர்வோர் பங்கேற்று தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என, காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Advertisement