முதியவரை தாக்கிய வாலிபர் கைது
திரு.வி.க.நகர், பெரம்பூர், தீட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வேலன், 75; அப்பகுதியில் மீன்பாடி வண்டி ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் வீட்டருகே வண்டியை நிறுத்தி விட்டு பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே பைக்கில் வந்த தேவராஜ், 22 மீன்பாடி வண்டி மீது மோதியுள்ளார்.
இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், தேவராஜ் அருகில் இருந்த கட்டையை எடுத்து, வேலனை தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அவர் பெரியார் நகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தலையில் ஏழு தையல்கள் போடப்பட்டுள்ளன. அவர் அளித்த புகாரின்படி, ரவுடி தேவராஜை திரு.வி.க.நகர் போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை என ராகுல் புகார்: விதிப்படி நடக்க சபாநாயகர் அறிவுரை
-
ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்
-
2027க்குள் ஜி.டி.பி.,யில் ஜெர்மனியை இந்தியா முந்திவிடும்; ஐ.எம்.எப்., கணிப்பு
-
மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
-
5 நாட்களில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரும்: வானிலை மையம் லேட்டஸ்ட் தகவல்
-
கூட்டணி கணக்கு குறித்து சட்டசபையில் விவாதம்!
Advertisement
Advertisement