யுகாதி விழா இன்று துவக்கம்


யுகாதி விழா இன்று துவக்கம்


தாராபுரம்:தாராபுரத்தை அடுத்த பொன்னிவாடி, பகவான் கோவிலில் யுகாதி திருவிழா, காவடிக் கூட்டத்துடன் இன்று துவங்குகிறது. காவடி மயில்ரங்கத்தை நாளை அடைகிறது. மறுநாள் கொடுமுடியில் தீர்த்தம் முத்தரித்து, 29ல் அமாவாசை விரதம் இருந்து, மறுதினம் திருவிழா விமரிசையாக நடக்கவுள்ளது. மார்ச், 31ல், காவடி தீர்த்தம் செலுத்துதல் நிகழ்வு மற்றும் ஏப்.,௧ம் தேதி வசந்த விழா மற்றும் சுவாமி திருவீதி உலாவுடன், விழா நிறைவடைகிறது.
* தாராபுரம் மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு விழா நேற்றிரவு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. ஏப்.,6ம் தேதி கொடிமரத்தில் பூவோடு வைக்கப்படும் நிகழ்வு நடக்கும். இதையடுத்து மூன்று நாட்கள் பக்தர்கள் பூவோடு, அலகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்துவர். ஏப்.,9ம் தேதி பண்டிகை விமரிசையாக நடக்கும்.

Advertisement