உ.பி.,யில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்: சொல்கிறார் யோகி ஆதித்யநாத்

லக்னோ: '' 100 ஹிந்துக்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் பாதுகாப்பாக இருக்க முடியும். ஆனால், 100 முஸ்லிம்களுக்கு மத்தியில் 50 ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது,'' என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: 100 ஹிந்து குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் பாதுகாப்பாக இருக்க முடியும். ஆனால், 100 முஸ்லிம்களுக்கு மத்தியில் 50 ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமா? அப்படி இருக்க முடியாது. இதற்கு வங்கதேசம் உதாரணம். முன்பு பாகிஸ்தான் இதற்கு உதாரணமாக இருந்தது.
உ.பி.,யில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர். ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்றால், முஸ்லிம்களும் பாதுகாப்பாக இருக்க முடியும். 2017க்கு முன்பு, இங்கு ஹிந்துக்களின் வீடு மற்றும் கடை எரிக்கப்பட்டால், அதேபோன்று முஸ்லிம்களின் கடை, வீடு எரிக்கப்பட்டது. ஆனால், 2017 ல் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.












மேலும்
-
நிலநடுக்கத்திற்கு மத்தியில் பூத்த மலர்; சாலையில் பெண்ணுக்கு பிரசவம்
-
போலீஸ்காரர் கொலையில் தேடப்பட்ட கஞ்சா வியாபாரி மீது துப்பாக்கிச்சூடு
-
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பாடல்கள் வைத்துக்கொள்ளலாம்: வெளியானது புதிய அப்டேட்!
-
பிறந்தேன் பிறந்து தெரியும் ஆனால் அன்னையைக் கண்டதில்லை
-
யார் யாருக்கு போட்டி என்பது பற்றி கவலையில்லை; நாங்கள் ஜெயிப்போம் என்கிறார் துரைமுருகன்!
-
தி.மு.க., அரசியல் நாடகங்களை மக்கள் இனியும் நம்பப் போவதில்லை: அண்ணாமலை