அண்ணனுடன் கோவிலுக்கு சென்ற தங்கை பலி அண்ணனுடன் கோவிலுக்கு சென்ற தங்கை பலி
அண்ணனுடன் கோவிலுக்கு சென்ற தங்கை பலி
புன்செய்புளியம்பட்டி:சத்தியமங்கலம், காந்தி நகரை சேர்ந்தவர் சீனிவாசன், 29; பெங்களூரு ஐ.டி., நிறுவன ஊழியர். இவரின் மனைவி ஹரி மயூரா, 27, தாய் கவிதா, 50, தங்கை விவேகா, 26; மூவரையும் அழைத்துக்கொண்டு டாடா ஜெஸ்ட் காரில், கோவை மாவட்டம் சிறுமுகை அருகே ஓதிமலை முருகன் மலைக் கோவிலுக்கு நேற்று சென்றார். காரை சீனிவாசன் ஓட்டினார்.
சத்தி-மேட்டுப்பாளையம் சாலையில், பவானிசாகரை அடுத்த சீரங்கராயன் கரடு அருகே வளைவில், கார் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வனப்பகுதியில் கவிழ்ந்தது. இதில் தலையில் படுகாயம் அடைந்த விவேகா சம்பவ இடத்தில் பலியானார். மற்ற மூவரும் படுகாயம் அடைந்தனர். சத்தி அரசு மருத்துவமனைக்கு மூவரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்தில் பலியான விவேகா, கோவை, சிங்காநல்லுாரில் உள்ள ஈ.எஸ்.ஐ., மருத்துவமனையில் பணியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
கண்காட்சி போட்டி: இந்தியா வருகிறார் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி
-
தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு இ.பி.எஸ்., பதில்
-
100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி தர மறுப்பு: மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
-
மாஜி எம்.எல்.ஏ., கருப்பசாமி பாண்டியன் மறைவு: இ.பி.எஸ். இரங்கல்
-
உ.பி.,யில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்: சொல்கிறார் யோகி ஆதித்யநாத்
-
லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை என ராகுல் புகார்: விதிப்படி நடக்க சபாநாயகர் அறிவுரை