குடியுரிமை சான்றிதழ் கட்டாயம்; தேர்தலில் பெரிய மாற்றத்தை அறிவித்தார் டிரம்ப்!

வாஷிங்டன்: வாக்காளர் பதிவுக்கு குடியுரிமைக்கான ஆவணச் சான்று கட்டாயம் இருக்க வேண்டும் உள்ளிட்ட தேர்தல் நடைமுறையில் மாற்றங்களை கட்டாயமாக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தினமும் அவர் வெளியிடும் புது புது அறிவிப்புகள் பரபரப்பை கிளப்பி வருகிறது. சட்டவிரோதமாக குடியேறி உள்ளவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் பணியில் மும்முரமாக செயல்பட்டார்.
இந்நிலையில், வாக்காளர் பதிவுக்கு குடியுரிமைக்கான ஆவணச் சான்று கட்டாயம் இருக்க வேண்டும். தேர்தல் நாளுக்குள் வாக்குச்சீட்டுகளை அனைவரும் பெறுவதை உறுதி செய்தல் உள்ளிட்ட அமெரிக்க தேர்தல் நடைமுறையில் மாற்றங்களை கட்டாயமாக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார்.
அதேபோல், 'கூட்டாட்சி தேர்தல்களில் வாக்களிக்கும் தகுதிக்கு பாஸ்போர்ட் போன்ற குடியுரிமை சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, சமூகப் பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் வெளியுறவுத்துறை உள்ளிட்ட கூட்டாட்சி நிறுவனங்களை பணியில் உள்ளவர்களில் குடியுரிமை சான்றிதழ் அல்லாதவர்களை அடையாளம் காண உதவும் தரவுகளை தேர்தல் அதிகாரிகளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
கையெழுத்திட்ட பிறகு வரும் வாரங்களில் தேர்தல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என டிரம்ப் தெரிவித்தார்.
வாசகர் கருத்து (10)
Jay - Bhavani,இந்தியா
26 மார்,2025 - 13:26 Report Abuse

0
0
Reply
சண்முகம் - ,
26 மார்,2025 - 12:17 Report Abuse

0
0
Srinivasan Krishnamoorthy - ,
26 மார்,2025 - 13:36Report Abuse

0
0
Reply
Keshavan.J - Chennai,இந்தியா
26 மார்,2025 - 11:43 Report Abuse

0
0
Reply
naranam - ,
26 மார்,2025 - 10:35 Report Abuse

0
0
Reply
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
26 மார்,2025 - 10:35 Report Abuse

0
0
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
26 மார்,2025 - 11:26Report Abuse

0
0
Ganapathy - chennai,இந்தியா
26 மார்,2025 - 11:55Report Abuse

0
0
Reply
Columbus - ,
26 மார்,2025 - 10:00 Report Abuse

0
0
Reply
பேசும் தமிழன் - ,
26 மார்,2025 - 08:22 Report Abuse

0
0
Reply
மேலும்
-
தந்தை, மகளை சுட்டுக் கொன்ற வாலிபர் தற்கொலை!
-
ரூ.200 கோடி வரி ஏய்ப்பை கண்டுபிடிக்க உதவிய வாட்ஸ் அப் செயலி: நிர்மலா சீதாராமன்
-
வீடு வீடாக சென்று போதைப்பொருள் பயன்படுத்துவோர் கணக்கெடுப்பு: பஞ்சாப் அரசின் புது திட்டம்
-
அமித்ஷா மீது உரிமை மீறல் தீர்மானம்: காங்கிரஸ் நோட்டீஸ்
-
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் அறிவுரை
-
கண்காட்சி போட்டி: இந்தியா வருகிறார் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி
Advertisement
Advertisement