ரயிலில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்; திண்டுக்கல் இளைஞர் கைது

மயிலாடுதுறை: ரயிலில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் திண்டுக்கல் இளைஞரை கைது செய்தனர்.
ரயிலில் கஞ்சா கடத்தலை கட்டுப்படுத்த ரயில்வே எஸ்பி. ராஜன் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை, சிதம்பரம் ரயில்வே போலீசார் மற்றும் தனி பிரிவு போலீஸ் பதி ஆகியோர் இணைந்து நேற்று மாலை தெலுங்கானா மாநிலம் கச்சிக்குடாவில் இருந்து மதுரை நோக்கி சென்ற வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை நடத்தினர்.
அப்போது எஸ்.1 கோச்சில் இருக்கைக்குக் கீழ், சந்தேகப்படும் வகையில் கிடந்த ட்ராவல் பேக் ஒன்றை போலீசார் எடுத்து சோதனை நடத்தினர். அதில் 2 பொட்டலங்களில் 16 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு அமர்ந்திருந்த திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த முசுவனத்தூர் பகுதியை சேர்ந்த முத்துச்செல்வம்.33. என்பவரிடம் நடத்திய விசாரணையில் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும் அவர் செய்தியாளர் அடையாள அட்டை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து பல லட்சம் மதிப்புடைய கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் முத்துச்செல்வனை கைது செய்து நாகப்பட்டினம் போதைப்பொருள் நுண்ணறிவு குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதனை அடுத்து முத்துச்செல்வனிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


மேலும்
-
திட்டமிட்ட உள்நோக்கத்துடன் அவதுாறு: அமெரிக்க அமைப்பின் அறிக்கைக்கு இந்தியா கண்டனம்!
-
சிறுவர்களால் நிகழும் சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம்; அதிர்ச்சி தகவல்
-
தந்தை, மகளை சுட்டுக் கொன்ற வாலிபர் தற்கொலை!
-
ரூ.200 கோடி வரி ஏய்ப்பை கண்டுபிடிக்க உதவிய வாட்ஸ் அப் செயலி: நிர்மலா சீதாராமன்
-
வீடு வீடாக சென்று போதைப்பொருள் பயன்படுத்துவோர் கணக்கெடுப்பு: பஞ்சாப் அரசின் புது திட்டம்
-
அமித்ஷா மீது உரிமை மீறல் தீர்மானம்: காங்கிரஸ் நோட்டீஸ்