ஸ்குவாஷ்: அரையிறுதியில் ஜோஷ்னா

மும்பை: இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் அரையிறுதிக்கு இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, அபே சிங் முன்னேறினார்.
இந்தியாவில் ஏழு ஆண்டுக்குப் பின், சர்வதேச 'இந்தியன் ஓபன் ஸ்குவாஷ்' மும்பையில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் சுற்றில் இத்தொடரின் 'நம்பர்-1' வீராங்கனை இந்தியாவின் ஆகான்ஷா, 'நம்பர்-5' ஆக உள்ள சக வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவை எதிர்கொண்டார்.
முதல் இரண்டு செட்டை ஜோஷ்னா 12-10, 13-11 என வென்றார். பின் சுதாரித்துக் கொண்ட ஆகான்ஷா, அடுத்த இரு செட்டுகளை 11-9, 11-9 என்ற வசப்படுத்தி பதிலடி தந்தார். வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த கடைசி, ஐந்தாவது செட்டை ஜோஷ்னா, 11-5 என எளிதாக கைப்பற்றினார். முடிவில் ஜோஷ்னா, 3-2 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
அபே சிங் அபாரம்
ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அபே சிங், மலேசியாவின் அமீசன்ராஜ் சந்திரனை எதிர்கொண்டார். முதல் இரு செட்டை 11-5, 11-8 என வசப்படுத்திய அபே சிங், அடுத்த செட்டையும் 11-7 என கைப்பற்றினார். முடிவில் அபே சிங் 3-0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

Advertisement