இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தணும்; வங்கதேசத்திற்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடில்லி: வங்கதேச தேசிய தினத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரித்துள்ளார்.
இது குறித்து வங்க தேச இடை க்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ்க்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில் கூறியிருப்பதாவது: வங்கதேச தினத்தை முன்னிட்டு, உங்களுக்கும், வங்கதேச மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்தியாவிற்கும், வங்க தேசத்திற்கும் இடையே இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த வேண்டும்.
பரஸ்பர உணர்திறனின் அடிப்படையில் உறவு கட்டமைக்கப்பட வேண்டும்.
வங்கதேசத்துடனான உறவுகளை வலுப்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து உறுதியுடன் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே வங்கதேச தேசிய தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். “உங்கள் தேசிய தினத்தை முன்னிட்டு, அரசு சார்பாகவும், இந்திய மக்கள் சார்பாகவும், என் சார்பாகவும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பீகாரில் லாலுவின் காட்டாட்சி வேண்டுமா, முன்னேற்றம் தரும் அரசு வேண்டுமா; அமித் ஷா பேச்சு
-
சென்னை அணி சொதப்பல்; ராஜஸ்தான் அணி அதிரடியான தொடக்கம்
-
இந்திய கலாசாரத்தின் ஆலமரமாக திகழும் ஆர்.எஸ்.எஸ்.,: பிரதமர் மோடி புகழாரம்!
-
ஷேன் வார்னே மரணத்தில் மறைக்கப்பட்ட உண்மை: வெளியான தகவலால் பரபரப்பு
-
இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.944 கோடி அபராதம் விதித்தது வருமான வரித்துறை
-
டில்லி அணிக்கு 2வது வெற்றி; ஐதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்
Advertisement
Advertisement