சட்டத்துறையில் வாய்ப்புகள் ஏராளம்

சட்ட படிப்புகளின் எதிர்காலம் என்ற தலைப்பில் கே.எம்.சி., சட்டக்கல்லுாரி முதல்வர் சவுந்தரபாண்டியன் பேசியதாவது:
சட்ட படிப்புகளை படிக்க வயது வரம்பு இல்லை என்பதால், விரும்பியவர்கள் சட்டம் படிக்கலாம். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை காட்டிலும், சட்டத்துறையில் பல்வேறு வளர்ச்சிகளும், மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன.
நாட்டில் பல்வேறு பிரிவுகளின் கீழ், வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனிநபர் மட்டுமின்றி, சுற்றுச்சூழல், வங்கி, இன்சூரன்ஸ், கல்விநிறுவனங்கள் என அனைத்திற்குள் வழக்கறிஞர்கள் தேவை அதிகம் உள்ளன. வழக்கறிஞர்களாக மட்டுமின்றி, சட்ட ஆலோசகர்கள், நீதிபதி உள்ளிட்ட பல்வேறு அதிகாரமிக்க பதவிகளிலும் அமரமுடியும். இத்தொழில் மேற்கொள்பவர்கள் பிறரை சார்ந்து இல்லாமல், சுயமாக சுதந்திரமாக செயல்படமுடியும். தகுதிகளையும், திறன்களையும் வளர்த்துக்கொண்டால், ஒரு மணி நேரத்திற்கு லட்சத்தில் சம்பாதிக்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும்
-
துார் வாருவதில் அரசு துறைகள் இடையே நீயா..நானா போட்டி; சுருளியாறு வழித்தடம் மறையும் அபாயம்
-
ஜம்மு-காஷ்மீரில் ரயில் சேவை: ஏப்., 19ல் பிரதமர் மோடி துவக்கம்
-
பெண்ணின் தோள் மீது கைபோட்ட நிதிஷ் புகைப்படத்தால் சர்ச்சை
-
ஓட்டல்களில் பிளாஸ்டிக் தாளில் உணவு பார்சல்கள் அலட்சியம்; உணவு பாதுகாப்புத்துறை ரெய்டு அவசியம்
-
பத்திரப்பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைப்பு: நாளை முதல் அமல்
-
ஜவுளிக்கழிவு மறுசுழற்சி செய்யும் முறை: திருப்பூருக்கு பிரதமர் மோடி பாராட்டு