ஜம்மு-காஷ்மீரில் ரயில் சேவை: ஏப்., 19ல் பிரதமர் மோடி துவக்கம்

புதுடில்லி : ரயில் போக்குவரத்தில் ஜம்மு - காஷ்மீரை, நம் நாட்டின் பிற நகரங்களுடன் இணைக்கும் வகையில் முதல் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்., 19ம் தேதி துவக்கி வைக்கிறார்.
மலைப்பாங்கான பகுதியில் ஜம்மு - காஷ்மீர் அமைந்துள்ள நிலையில், அங்கு ரயில் போக்குவரத்தை இயக்குவது மிகுந்த சவாலாக உள்ளது. எனினும், இதை சாத்தியமாக்கும் வகையில் ஜம்மு - காஷ்மீரின் உதம்பூர் - ஸ்ரீநகர் - பாராமுல்லா இடையே உள்ள 272 கி.மீ., தொலைவு ரயில் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இதில், கட்ரா - பானிஹால் இடையேயான 111 கி.மீ., தொலைவு உள்ள ரயில் இணைப்பின் பணி மட்டும் நிறைவுபெறாமல் இருந்தது.
இந்நிலையில், இத்திட்டம் முடிவுற்ற நிலையில், கடந்த ஜனவரியில், சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. இதைத்தொடர்ந்து, இந்த ரயில் திட்டத்தை, பிரதமர் மோடி ஏப்., 19ம் தேதி கட்ரா ரயில் நிலையத்தில் கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாதா வைஷ்ணவதேவி கோவிலின் அடிவாரத்தில் அமைந்துள்ள கட்ரா பகுதியில் ரயில் நிலையம் திறக்கப்பட உள்ளதால், இங்கு வரும் ஏராளமான யாத்ரீகர்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் வாயிலாக, ஸ்ரீநகர் வழியாக காஷ்மீருக்குள் ரயிலில் பயணம் செய்ய வழிவகை ஏற்படும். இதேபோல், நம் நாட்டின் பிற நகரங்களில் இருந்தும், ஜம்மு - காஷ்மீருக்கு ரயிலில் பயணிக்க இயலும்.









மேலும்
-
குறையும் பருத்தி மகசூல்
-
இந்தியா - சீனா உறவின் 75வது ஆண்டு விழா இருதரப்பு உறவை பலப்படுத்த தலைவர்கள் உறுதி
-
சூளகிரியில் வர்த்தக மையம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு
-
கொல்கட்டா சென்ற கன்டெய்னரை உடைத்து 111 புது 'ஏசி'க்கள் திருட்டு: 6 பேர் சிக்கினர்
-
வடை மாலை அணிந்த அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய ராமர்
-
வியாசர்பாடி மேம்பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார்