கடன் தொல்லையால் தி.மு.க., கிளைச் செயலாளர் தற்கொலை 

திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த காட்டுச்சிவிரியை சேர்ந்தவர் கமலக்கண்ணன், 43; தி.மு.க., கிளைச் செயலாளர். திண்டிவனத்தில் பூ மார்க்கெட்டில் வேலை செய்துவந்தார்.

இவர் சமீபத்தில் அவரது பெண்ணை திருமணம் செய்து கொடுத்ததில் அதிக அளவில் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.இதனால், மனமுடைந்த அவர், நேற்று மாலை வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement