சிதம்பரம் கொலை வழக்கு : திருவாரூர் நபர் கைது

சிதம்பரம் : சிதம்பரம் அருகே அம்மாபேட்டையில் வசிக்கும் சின்னையன் வீட்டில் நேற்று முன்தினம் இரவு, ஒருவர் திருட முயன்றார். அப்போது கண்விழித்த சின்னையனை அந்த நபர் கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டார்.
காயமடைந்த சின்னையன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாமலைநகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார். அதில், சின்னையனை தாக்கிய நபர் திருவாரூர் மாவட்டம். நன்னிலம் முடிகொண்டான் பகுதியைச் சேர்ந்த கேசவன், 52; என்பது தெரியவந்தது.
அதையடுத்து, கேசவனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கைதான கேசவன், 2020ம் ஆண்டு அம்மாபேட்டை பகுதியில், நடராஜன் என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில் தேடப்பட்டவர் என்பது தெரியவந்தது. சிதம்பரம் அம்மாபேட்டையில் அவரது சித்தி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றபோது, நடராஜனை கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை நகர் போலீஸ் நிலையம் வந்த எஸ்.பி., ஜெயக்குமார் கூறுகையில், கேசவனும் கொலை செய்யப்பட்ட நடராஜனும் ஒரே இடத்தில் வேலை செய்துள்ளனர். இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் நடராஜனை கேசவன் கொலை செய்துள்ளார். அண்ணாமலை நகர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு ௪ குற்றவாளியை கைது செய்துள்ளனர் என்றார்.
மேலும்
-
ஜவுளிக்கழிவு மறுசுழற்சி செய்யும் முறை: திருப்பூருக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
ஆட்டிசம் பாதித்த சிறுவனுக்கு அடி: ஆசிரியர் கைது; பள்ளிக்கு சீல்
-
'நான் பழைய மூர்த்தி இல்லை' செல்லுார் ராஜூவுக்கு அமைச்சர் மூர்த்தி பதில்
-
நலத்திட்ட உதவி வழங்கல்
-
ரத்ததான முகாம்
-
இளையான்குடியில் தரமின்றி கட்டப்படும் நுாலக கட்டடம்