உங்கள் சூழ்ச்சி ஒருபோதும் நிறைவேறாது: எதிர்க்கட்சிகளுக்கு சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

28

சென்னை:நீங்கள் செய்ய நினைக்கும் கதையாடல்களுக்கு பின்னால் இருக்கும் சூழ்ச்சி ஒருபோதும் நிறைவேறாது என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு:


தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்திருக்கிறதா - குறைந்திருக்கிறதா என்பதைப் புள்ளிவிவரங்கள் சொல்லும்.


கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலங்கள் போல் சாதி - மத மோதல்கள் நிகழ்ந்துள்ளனவா? குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகிறார்களா?


சட்டம் - ஒழுங்கு சரியாக இருப்பதால்தான் தமிழகத்தை நோக்கி முதலீடுகள் வந்து குவிகின்றன.


சட்டம் ஒழுங்குப் பிரச்னைகளைப் பூதாகரமாக்கி, மக்களைக் குழப்பவும் - திசைதிருப்பவும் எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. அவர்களின் தீய எண்ணத்துக்குச் சில ஊடகங்களும் துணை போவது வேதனையளிக்கிறது.


நீங்கள் செய்ய நினைக்கும் கதையாடலுக்கு பின்னால் இருக்கும் சூழ்ச்சி ஒருபோதும் நிறைவேறாது.


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement