வணிகவியல் தேசிய கருத்தரங்கம்

திண்டிவனம்: திண்டிவனம் கோனேரிக்குப்பம் சரஸ்வதி கலை கல்லுாரியில், வணிகவியல் துறை சார்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் வீரமுத்து தலைமை தாங்கினார். வணிகவியல் துறை உதவி பேராசிரியர் ராகினி வரவேற்றார்.
நிர்வாக அலுவலர் சிவா, பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர் தண்டபாணி வாழ்த்தி பேசினர்.
பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இணை பேராசிரியர் கணேஷ்குமார், 'தொழில் முனைவோரின் பசுமை சந்தைப்படுத்துதல் தொழில்நுட்பங்களின் புதிய பரிமாணம்' குறித்து பேசினார்.
பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் பங்கேற்றனர். சிறந்த கட்டுரையாளர்களுக்கு சான்றிதழ், புத்தகங்கள் வழங்கப் பட்டது.
வணிகவியல் துறை உதவி பேராசிரியர் தாஜூன்னிசா நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பறவைகளுக்கு தண்ணீர் வழங்கும் இளைஞர்களுக்கு குவியும் பாராட்டு
-
சாத்துார் எட்டூர் வட்டம் டோல்கேட்டில் இன்று முதல் புதிய சுங்க கட்டண விபரம்
-
நேர்காணல்
-
இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்
-
பால் உற்பத்தியாளர்கள் கடை மராமத்து பணிக்காக மூடும் அறிவிப்பு பங்குனிப்பொங்கலுக்கு பின் செய்ய எதிர்பார்ப்பு
-
வயல்வெளி வைக்கோல் தீயில் எரிந்து சேதம்
Advertisement
Advertisement