கூட்டுறவு சங்கத்தில் விவசாய கடன் தள்ளுபடி ரசீது வழங்க வலியுறுத்தல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஒன்றியம் வெண்ணத்துார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 2016-17ம் ஆண்டிற்கான விவசாய கடன் தள்ளுபடி ரசீது வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
காவிரி-வைகை- கிருதுமால்- குண்டாறு இணைப்பு கால்வாய் நீர்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்டச் செயலாளர் மலைச்சாமி தலைமையிலான விவசாயிகள் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர்.
அதில், வெண்ணத்துார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நிரந்தரமாக பணியாளர்களை நியமிக்க வேண்டும். 2016-17 ம் ஆண்டில் விவசாய கடன் தள்ளுபடி செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லாமல் 40க்கு மேற்பட்ட விவசாயிகள் புதிய கடன், உரம் வாங்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாய கடன் தள்ளுபடி ரசீது வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குஜராத்தில் பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து; 13 பேர் பலி; 6 பேர் காயம்
-
நீலகிரி மாவட்ட வாகனங்களுக்கு இ-பாஸ் அவசியமில்லை: கலெக்டர் அறிவிப்பு
-
அன்போடு... அன்போடு... அன்போடு...! பா.ஜ., எம்.எல்.ஏ.,வுக்கு முதல்வர் பதில்
-
காசாவில் 10 நாட்களில் 322 குழந்தைகள் பலி
-
மலேசியாவில் காஸ் குழாய் வெடித்தது; தீப்பிழம்புகள் எழுந்ததால் பரபரப்பு!
-
டாஸ்மாக் ரெய்டுக்கு எதிரான வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யணும்: ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மனு
Advertisement
Advertisement