பொம்மிடியில் எம்.எப்.ஆர்., சினிமாஸ் திரையரங்கம் திறப்பு விழா

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள, பொம்மிடியில் தமிழகத்தி-லேயே முதன் முதலாக அமைக்கப்பட்ட பலுான் திரையரங்கை, கடலோர காவல் படை டி.ஐ.ஜி., ஜெயந்தி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்


தர்மபுரி மாவட்டம், பொம்மிடியில் தமிழகத்திலேயே முதன் முதலாக எம்.எப்.ஆர்., சினிமாஸ் எனும் பலுான் திரையரங்கம் உருவாக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று திரையரங்கு நிறு-வனர் டாக்டர் ரமேஷ் தலைமையில் நடந்தது. சென்னை கட-லோர காவல் படை டி.ஐ.ஜி., ஜெயந்தி, குத்துவிளக்கேற்றி திரைய-ரங்கை திறந்து வைத்து பேசினார்.


தர்மபுரி மாவட்ட ஜெ.,பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்-றிவேல், திரைப்பட நடிகர் கூல் சுரேஷ், சென்னை ஆர்.ஆர்.பிரி-யாணி நிறுவனர் தமிழ்செல்வன், தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்-னேற்ற சங்க ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன், கவிஞர் அன்பு தீபன், திரையரங்கு இயக்குனர் டாக்டர் அருண் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.



முன்னதாக பிரவீன் டிசெளசா வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எம்.எப்.ஆர்., குடும்பத்தினர் கனகம-ணிரமேஷ், ரம்யா, டாக்டர் செவ்வந்தி உள்ளிட்டோர் செய்திருந்-தனர்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் முருகன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்ட தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
பிரபாகரன் நன்றி கூறினார்.

Advertisement