மதுரையில் போலீஸ் என்கவுன்டர்; பிரபல ரவுடி போலீசாரால் சுட்டுக்கொலை

மதுரை: மதுரையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக படுகொலை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள், அடுத்தடுத்து நடந்தது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக இருந்தது.
இந்நிலையில், என்கவுன்டர் ஆயுதத்தை அரசு கையில் எடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், சென்னையில் நகை பறிப்பில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
தேனி மாவட்டத்தில் போலீஸ்காரரை கொலை செய்த நபர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்நிலையில் இன்று மதுரை ரிங் ரோட்டில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பிரபல ரவுடி சுபாஸ் சந்திர போஸ் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.இவர் காளி என்பவர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார்.
கொல்லப்பட்ட நபர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும், போலீசாரை தாக்க முயற்சித்தபோது சுடப்பட்டதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. சம்பவ இடத்தில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (7)
Kasimani Baskaran - Singapore,இந்தியா
01 ஏப்,2025 - 04:03 Report Abuse

0
0
Reply
Srinivasan Ramabhadran - CHENNAI,இந்தியா
31 மார்,2025 - 21:59 Report Abuse

0
0
Reply
ராஜன் - ,
31 மார்,2025 - 21:48 Report Abuse

0
0
Reply
Appa V - Redmond,இந்தியா
31 மார்,2025 - 21:25 Report Abuse

0
0
Reply
lana - ,
31 மார்,2025 - 21:24 Report Abuse

0
0
Reply
Chandrasekaran - ,
31 மார்,2025 - 21:13 Report Abuse

0
0
Reply
மனி - ,
31 மார்,2025 - 21:07 Report Abuse

0
0
Reply
மேலும்
-
நிலநடுக்கத்தால் உருக்குலைந்த மியான்மர் பலி எண்ணிக்கை 2,700 ஆக உயர்ந்தது
-
தி.மு.க., சொன்னது வேறு; செய்வது வேறு
-
கிழிந்த ஓலை கூரை... உடைந்த கம்பு...போக்குவரத்து நெரிசல்; கல்லார் இ- -பாஸ் சோதனை சாவடியின் அவல நிலை
-
அவெனிஸ், பர்க்மேன் ஸ்கூட்டர் சுசூகியின் '125 ட்வின்ஸ்'
-
கார் விற்பனை 3.43 சதவீதம் உயர்வு இரண்டாம் இடத்துக்கு 'தொடரும் போட்டி'
-
எக்ஸ்.யூ.வி., 700 'டாப் மாடல்' விலை குறைப்பு
Advertisement
Advertisement