8 இடங்களில் இன்று தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், வீட்டு வசதித்துறை அமைச்சருமான முத்துசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: தமிழகத்தில் நுாறு நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்க மறுக்கும் மத்திய பா.ஜ., அரசை கண்டித்து இன்று காலை, 10:00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.
இதன்படி யூனியன் வாரியாக ஈரோடு - காளிங்கராயன்பாளையம் பழைய கால்நடை மருத்துவமனை அருகே, சென்னிமலை - வெள்ளோடு நால் ரோடு, மொடக்குறிச்சி கிழக்கு - மொடக்குறிச்சி நால்ரோடு, மொடக்குறிச்சி மேற்கு - அவல்பூந்துறை நால் ரோடு, மொடக்குறிச்சி தெற்கு - அரச்சலுார் அண்ணா நகர், கொடுமுடி தெற்கு - கொடுமுடி பஸ் ஸ்டாண்ட் அருகே, கொடுமுடி மேற்கு - அஞ்சூர் பஞ்., நல்லசெல்லிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே, கொடுமுடி வடக்கு - கருமாண்டம்பாளையம் நால் ரோடு என எட்டு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
மதுரையில் போலீஸ் என்கவுன்டர்; பிரபல ரவுடி போலீசாரால் சுட்டுக்கொலை
-
மோசமான நடத்தை: பிரிட்டன் பிரைமார்க் நிறுவன தலைமை நிர்வாகி பால் மர்ச்சண்ட் ராஜினாமா
-
வக்பு சட்ட திருத்தத்தை எம்.பி.,க்கள் ஆதரிக்கணும்: பிஷப் கூட்டமைப்பு வேண்டுகோள்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
போதை பொருள் வர்த்தகத்திற்கு எதிரான அரசின் இடைவிடாத வேட்டை தொடரும்; உள்துறை அமைச்சர் அமித் ஷா