பவானிசாகர் பகுதி கிராமங்களில் பண்ணாரி அம்மன் உற்சவர் உலா
பவானிசாகர்: சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் விழா அடுத்த மாதம் நடக்கவுள்ள நிலையில், பண்ணாரி அம்மன் உற்சவர், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பவானிசாகர் சுற்றுவட்டார கிராமங்களில் திருவீதி உலா சென்றுள்ளது. தொட்டம்பாளையம் பகுதியில் மலைவாழ் மக்களின் பீனாட்சி வாத்தியம் முழங்க நேற்று உலா நடந்தது.
அப்போது நுாற்றுக்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள், பண்ணாரி அம்மன் சப்பரம் செல்லும் சாலையில் நீண்ட வரிசையில் படுத்து அம்மனை வழிபட்டனர். அவர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டு அம்மன் சப்பரம் சென்றது. பல்வேறு கிராமங்களுக்கு சென்ற அம்மனை, வழி நெடுகிலும் காத்திருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திணறிய கோல்கட்டா : மும்பை அணிக்கு 117 ரன்கள் இலக்கு
-
மவுனம் அனைத்தும் நன்மைக்கே: டில்லி பயணம் குறித்த கேள்விக்கு செங்கோட்டையன் பதில்!
-
மதுரையில் போலீஸ் என்கவுன்டர்; பிரபல ரவுடி போலீசாரால் சுட்டுக்கொலை
-
மோசமான நடத்தை: பிரிட்டன் பிரைமார்க் நிறுவன தலைமை நிர்வாகி பால் மர்ச்சண்ட் ராஜினாமா
-
வக்பு சட்ட திருத்தத்தை எம்.பி.,க்கள் ஆதரிக்கணும்: பிஷப் கூட்டமைப்பு வேண்டுகோள்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
Advertisement
Advertisement