நடுநிலைப்பள்ளியில் ஆண்டுவிழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த நாச்சிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின், 10ம் ஆண்டு விழா நடந்தது.

தலைமை ஆசிரியர் விஜயா தலைமை வகித்தார், வேப்பனஹள்ளி வட்டார கல்வி அலுவலர்கள் பழனிசாமி, மரிய ரோசி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். முன்னாள் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களுக்கு மரியாதை அளிக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள், பேச்சு போட்டி, இசை நிகழ்ச்சி நடந்தது.

Advertisement