ஏ.டி.எம்., கட்டணம் உயர்வுக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!

சென்னை: ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க, கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை: மத்திய அரசு அனைவரும் வங்கிக் கணக்குகளை திறக்க வலியுறுத்தியது. பின்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கை வந்தது. டிஜிட்டல் இந்தியாவை முன்னிலைப்படுத்தியது. அதைத் தொடர்ந்து என்ன நடந்தது?
டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான கட்டணம், ரிசர்வ் வங்கி மாத வரம்பிற்கு மேல் ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கு ரூ. 23 வரை வசூலிக்க அனுமதித்துள்ளது. ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க கூடுதல் கட்டணம் வசூலிப்பது மக்கள் ஒரே நேரத்தில் தேவைக்கு அதிகமாக பணம் எடுக்கும் நிலை உருவாகும்.
ஏற்கனவே 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் தரப்படாமல் உள்ளது. ஏ.டி.எம்., கட்டண உயர்வால் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு மேலும் சுமை ஏற்படும். இது டிஜிட்டல் மயமாக்கல் அல்ல. ஏழைகளுக்கு கஷ்டத்தை கொடுக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.










மேலும்
-
டாஸ்மாக் ரெய்டுக்கு எதிரான வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யணும்: ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மனு
-
குளம் தூர் வாரும் பணி துவக்க விழா
-
பெருமைக்குரிய அம்மா
-
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை
-
கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு
-
2026ல் மார்ச் 31க்குள் நக்சலிசம் ஒழிக்கப்படும்; அமித்ஷா திட்டவட்டம்