கட்சி நிர்வாகிகளால் மன உளைச்சல்; திருமாவளவன் விரக்தி வீடியோ!

சென்னை: ''கட்சி நிர்வாகிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடியும் வரை கட்சி நிர்வாகிகள் யாரும் யுடியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்க கூடாது'' என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் என்பார்களே, அப்படி பல்வேறு நெருக்கடிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் நாம், கட்சி முன்னணி தோழர்களின் அணுகுமுறைகளாலும் காயப்பட வேண்டி இருக்கிறது. வேதனைப்பட வேண்டி இருக்கிறது என்பது தான் நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிற ஒன்றாகும்.
முரண்பாடுகள்
நமக்குள் எவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ள கூடாது. பதிவு செய்ய கூடாது. கடந்த 10 ,15 ஆண்டுகளாக இதை நான் திரும்ப திரும்ப சொல்லி வருகிறேன். இயக்கத்தின் முன்னணி தோழர்கள் யுடியூப் போன்ற சேனல்களில், யாராவது பேட்டிக்கு அழைத்தால், அந்த சேனல் எத்தகைய பின்னணியை கொண்டது. அதை நடத்துகிறவர்கள் யார்?
என்ன நோக்கத்திற்காக அழைக்கிறார்கள் என்று கணக்கில் கொள்ளாமல், கருத்தில் கொள்ளாமல், ஏதோ ஒரு வாய்ப்பு தருகிறார்கள் என்கிற அடிப்படையில் பங்கேற்பது கவலைக்குரியது ஆகும். பேட்டிக்கு அழைத்தால் கட்சி தலைமையிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அணுகுமுறையை கொண்டிருக்க வேண்டும்.
பேட்டி கொடுக்காதீங்க!
பழனிசாமி அமித்ஷாவை சந்தித்தது அகில இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்போதே தேர்தலுக்கான சூடு பிடித்துவிட்டது. மனம் போன போக்கில் கருத்து சொல்வதை தவிர்க்க வேண்டும். கட்சியின் தலைவர்கள் என்ற முறையில் இதை சொல்ல வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. சட்டசபை தேர்தல் முடியும் வரை கட்சி நிர்வாகிகள் யாரும் யுடியூப் சேனலுக்கு பேட்டி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.











மேலும்
-
பார்லிமென்டில் திருத்தப்பட்ட வக்பு மசோதா நாளை தாக்கல்
-
குஜராத்தில் பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து; 13 பேர் பலி; 6 பேர் காயம்
-
நீலகிரி மாவட்ட வாகனங்களுக்கு இ-பாஸ் அவசியமில்லை: கலெக்டர் அறிவிப்பு
-
அன்போடு... அன்போடு... அன்போடு...! பா.ஜ., எம்.எல்.ஏ.,வுக்கு முதல்வர் பதில்
-
காசாவில் 10 நாட்களில் 322 குழந்தைகள் பலி
-
மலேசியாவில் காஸ் குழாய் வெடித்தது; தீப்பிழம்புகள் எழுந்ததால் பரபரப்பு!