ஆசிய கூடைப்பந்து: இந்தியா ஏமாற்றம்

சிங்கப்பூர் சிட்டி: ஆசிய கூடைப்பந்து காலிறுதியில் ஏமாற்றிய இந்திய அணி, நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது.
சிங்கப்பூரில், ஆசிய கோப்பை கூடைப்பந்து (3x3) தொடர் நடக்கிறது. நேற்று நடந்த ஆண்களுக்கான காலிறுதியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய இந்திய அணி 11-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்திய அணிக்கு அரவிந்த் முத்து (4 புள்ளி), ஹர்ஷ் தாகர் (3), குஷால் சிங் (3), பிரனவ் பிரின்ஸ் (1) ஆறுதல் தந்தனர்.

Advertisement