பஞ்சாங்கம் வெளியீடு

மதுரை: மதுரையில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் டி.வி.எஸ்., நகர் பாரதியார் கிளை சார்பில் 'விசுவவாசு' தமிழ்ப் புத்தாண்டிற்கான ஹோமம், பஞ்சாங்கம் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது.

முதல் பிரதியை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் வெளியிட கணேஷ் பேப்பர் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சங்கரநாராயணன் பெற் றார். கிளைத் தலைவர் முரளி ஏற்பாடு செய்தார். தமிழ்நாடு பிராமணர் சங்க மதுரை தலைவர் ரங்கராஜன், கிளை செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement