பக்தர்கள் பாதம் காக்க தேங்காய் நார் கம்பளம்

பல்லடம்; பல்லடம் அடுத்த மாதப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துக்குமாரசுவாமி கோவிலில் ஆண்டுதோறும், வைகாசி விசாகம், கார்த்திகை தீபம், தைப்பூசம் உள்ளிட்ட விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அமாவாசை, பவுர்ணமி, சஷ்டி, அஷ்டமி, பிரதோஷம் உள்ளிட்ட மாதாந்திர விஷேச நாட்களிலும் அதிகப்படியான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர்.

கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவிலை சுற்றி வரும் பக்தர்கள், கடும் வெப்பம் காரணமாக, காலை கீழே வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

குறிப்பாக, முதியோர், குழந்தைகள் உள்ளிட்டோர் சிரமப்படுகின்றனர். கோவிலை சுற்றி வர பக்தர்களின் நலன் கருதி, கோவில் நிர்வாகம் சார்பில், தேங்காய் நார் கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது.

Advertisement