ரயில்வே வருவாய் 48 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி; ரயில்வே துறையின் சரக்கு கையாளுகை வருவாய், கடந்த 2023 - 24ம் நிதியாண்டில் 1.68 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
கடந்த 2019 - 20ம் நிதியாண்டில் 1.13 லட்சம் கோடி ரூபாயாக இருந்த ரயில்வேயின் சரக்கு கையாளுகை வருவாய், 2023 - 24ம் நிதியாண்டில் 1.68 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நான்கு ஆண்டுகளில் 55,000 கோடி ரூபாயும்; 48 சதவீதமும் வருவாய் அதிகரித்து உள்ளது.
கொரோனா காலகட்டத்தின் போது சாலைப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால், அதிகப்படியான பொருட்கள் ரயில் மார்க்கமாகவே அனுப்பப்பட்டது.
இதன் பிறகு சரக்கு கையாளுகை வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பயணியர் வாயிலான வருவாயை பொறுத்தவரை, கடந்த 2019 - 20ல் 50,700 கோடி ரூபாயிலிருந்து 2023 - 24ல் 70,700 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
இவ்வாறு தெரிவித்தார்.
மேலும்
-
வெப்ப அலை எதிரொலி; கர்நாடகாவில் அரசு அலுவலக நேரத்தில் மாற்றம்
-
தேனீக்கள் கொட்டியதில் கேரள சுற்றுலாப் பயணி பலி
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு!
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்