ஏரியில் மூழ்கி குழந்தை பலி

திண்டிவனம்: ஒலக்கூர் அருகே மாயமான பெண் குழந்தை நீரில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

ஒலக்கூர் சாரம் கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி செல்வி. இவர்களின் 2 வயது மகள் சுமித்ரா. வீட்டிலிருந்த குழந்தை கடந்த 30ம் தேதி மாயமனார். புகாரின்பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து குழந்தையை தேடி வந்தனர்.

நேற்று காலை 11:00 மணிக்கு, ராம்குமார் வீட்டருகே உள்ள ஏரியில் குழந்தை சுமித்ராவின் உடல் மிதந்தது.

போலீசார், குழந்தை சடலத்தை கைப்பற்றி, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை செய்கின்றனர்.

Advertisement