தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடியது சட்டசபை!

2


சென்னை: மூன்று நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின், சட்டசபை கூட்டம் இன்று (ஏப்ரல் 01) மீண்டும் துவங்கியது.



சட்டசபையில் மார்ச், 14ம் தேதி பொது பட்ஜெட், 15ல் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம், 17 முதல், 21 வரை நடந்தது. தொடர்ந்து, 24 முதல் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின், இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடியது. நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணி துறை மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட உள்ளன. அது தொடர்பான விவாதத்திற்கு பதில் அளித்து, புதிய அறிவிப்புகளை துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட உள்ளார்.

Advertisement