செம்பரம்பாக்கம் ஏரி மதகில் நீர் கசிவு

குன்றத்துார், ன்னை மாநகரின் நீராதாரமான செம்பரம்பாக்கம் ஏரி 6,300 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில், 3.64 டி.எம்.சி., கொள்ளளவு நீர் சேகரிக்க முடியும். நீர்மட்டம் 24 அடி.
கோடை காலம் துவங்கி உள்ள நிலையிலும், ஏரியில் தற்போது 21 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது. இந்த நிலையில், 5 கண் மதகு பகுதியில் ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனால், ஏரியில் உள்ள நீர் மெல்ல வெளியேறி வீணாகிறது. தண்ணீர் கசிவை சரிசெய்ய வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஏரியில் அதிக தண்ணீர் உள்ளதால், அழுத்தம் காரணமாக நீர் கசிவு இருக்கும். இதனால், எந்த பதிப்பும் இல்லை' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரும்பார்த்தபுரம் பைபாசில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் அதிரடி
-
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மாலில் உள்ள ஓட்டலுக்கு நோட்டீஸ் வழங்கல்
-
இன்றைய மின்தடை..
-
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியில் முறைகேடு விசாரணை நடத்த அ.தி.மு.க., கோரிக்கை
-
ரூ.29 கோடியில் கட்டப்பட்ட புது பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படுமா: சில்லரை பணிகளால் 'அம்போ'ன்னு நிற்கிறது
-
விழிப்புணர்வு பட்டிமன்றம்
Advertisement
Advertisement