31 கிலோ கஞ்சாவுடன் பீஹார் வாலிபர் கைது

அம்பத்துார், பட்டரைவாக்கம் ரயில் நிலையம் அருகே, அம்பத்துார் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, சூட்கேசுடன் திரிந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அதில், 3.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 31 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது.
விசாரணையில், பீஹாரைச் சேர்ந்த சந்திரன்குமார் கேவத், 30, என்பதும், ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, அம்பத்துார் தொழிற்பேட்டை பகுதியில் பணியாற்றும் வடமாநில வாலிபர்களுக்கு விற்பனை செய்ததும் தெரிந்தது.
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வரலாற்றில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
-
லாரி கவிழ்ந்து கோர விபத்து; தந்தை மகன், மகள் உயிரிழப்பு
-
ரூ.63 கோடி முறைகேடு; கர்நாடகாவில் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் கைது
-
உலகின் சிறந்த 'டாப்' 100 விமான நிலையங்கள் பட்டியல் இதோ; 4 இந்திய விமான நிலையங்கள் சாதனை!
-
அமெரிக்கா - சீனா இடையே வரி விதிப்பு போர்; ரஷ்யா கிண்டல்
-
மாதவிடாய்; வகுப்பறை வாசலில் தேர்வு எழுதிய மாணவி; விசாரணைக்கு உத்தரவு
Advertisement
Advertisement