சக அதிகாரியிடம் 30,000 ரூபாய் லஞ்சம்: முத்திரை ஆய்வாளர் கைது!

6


கிருஷ்ணகிரி: ஓய்வு கால பண பலனுக்கான பட்டியலை தயார் செய்து வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முத்திரை ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள தொழிலாளர் திறன் மேம்பாட்டு துறை முத்திரை ஆய்வாளர் அலுவலகத்தில், முத்திரை பணியாளராக நாகராஜன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வரும் 30ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார்.


இதற்காக ஓய்வு கால பண பலன்களுக்கான பட்டியலை தயார் செய்து வழங்க ரூ.30,000 லஞ்சம் வாங்கிய ஓசூர் முத்திரை ஆய்வாளர் தமிழ்செல்வன் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement