பாம்பன் பாலம் திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து மதுரை ஆதீனம் வீடியோ வெளியீடு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் செங்குத்தான தூக்கு பாலம் திறப்பு விழாவில் இன்று பிரதமர் மோடி பங்கேற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். இந்நிலையில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து மதுரை ஆதீனம் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ரயில்வே பாலத்திற்கு பிறகாக, தற்போது பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே பாலம் பெருமைக்குரியது. இலங்கை இலங்கை தமிழர்களுக்கு என பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் தெரிவித்திருந்தேன் அவை அத்தனையும் நிறைவேற்றி இருக்கிறார் குறிப்பாக தமிழக மீனவர்கள் அதனை பேரையும் விடுதலை செய்ய வைத்துள்ளார். அவர்களின் படகுகளை மீட்டுக் கொண்டு வந்துள்ளார்.
தொடர்ந்து இலங்கை தமிழர்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கும், இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார் அத்தனைக்கும் பாராட்டுக்குரியவர். கச்சத்தீவை காங்கிரஸ் ஆட்சியின் போது தான் தாரைவாக்கப்பட்டது அப்போது துணை நின்றவர்கள் குறித்து நான் பேச விரும்பவில்லை ஆனால் இப்போது கச்சத்தீவை மீட்க வேண்டும் என பேசி வருகின்றனர்.
பிரதமர் அவர்கள், கச்சத்தீவை மீட்டு தந்து, இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு அமைந்திட ஆவணம் செய்வார்கள் என நம்பிக்கை இருக்கிறது என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

