கருங்குழி கோவில் குளம் சீரமைக்க கோரிக்கை

மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி பேரூராட்சி 14வது வார்டில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் குளம்முழுதும் ஆகாய தாமரை மற்றும் புற்கள் வளர்ந்து, பாசி படர்ந்து உள்ளது. குப்பை கொட்டும் இடமாகவும் மாறி உள்ளது.

தண்ணீர் தெரியாத வண்ணம் ஆகாய தாமரை படர்ந்து உள்ளதால், கொசு உற்பத்தியும் அதிகமாக உள்ளது.இப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய கோவில் குளம், தற்போது பயன்பாடு இன்றி உள்ளது.நீர் ஆதாரத்தை காக்கும் பொருட்டு, குளத்தில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும்.

குளத்தின் உள் பகுதியை சீரமைத்து, கழிவுகளை அகற்ற துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement