மாநில தலைவராக அறிவித்தால் ஏற்க தயார்: ராமலிங்கம் பேச்சு
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டையில், மேற்கு ஒன்றிய பா.ஜ., கட்சி அலுவல-கத்தை, நேற்று மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் திறந்து வைத்தார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தி.மு.க.,வுக்கு எதிராக இருக்கும் அனைத்து அரசியல் அமைப்புக-ளையும் ஒன்றிணைத்து, பா.ஜ., முன்னின்று பணியாற்றும். தீய சக்தியை அகற்ற ஒன்றுபடுவோம், உழைப்போம்.
தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை நிறு-வுவோம் என்பதுதான் எங்களது சூளுரை. வக்ப் வாரிய சட்ட திருத்தத்தை எதிர்ப்பவர்களுக்கு, திருத்தம் குறித்து ஒன்றும் தெரி-வதில்லை. எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர் முட்-டாள்கள். தேசத்திற்கான சட்டமாக வக்ப் வாரிய திருத்தம் உள்-ளது.
'நீட்' தேர்வு எதிர்ப்பு தொடர்பாக முதல்வர் கூட்டி உள்ள அனைத்து கட்சி கூட்டம், டுபாக்கூர் கட்சிகளின் கூட்டம். தி.மு.க., அரசின் ஊழல் பணத்தை பங்கிடும் டுபாக்கூர் கட்சிகள் கூட்டமாகத்தான் அமையும். ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமு-றையை முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆதரித்தார். அவருக்கு புத்தி இருந்தது ஆதரித்தார்.
இப்போதைய முதல்வருக்கு புத்தி இல்லை. அதனால் ஆதரிக்க-வில்லை. பா.ஜ.,வின் மாநில தலைவராக அறிவித்தால் ஏற்றுக்-கொள்வேன். தலைமை என்ன விரும்புகிறதோ அதை செயல் ப-டுத்தவே நாங்கள் உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.