கணவர் மாயம்: மனைவி புகார்

குமாரபாளையம்: குமாரபாளையம், நாராயண நகர் பகுதியை சேர்ந்தவர் திவ்யா, 35; கார்மென்ட்ஸ் தொழிலாளி. இவரது கணவர் கங்காதரன், 35; விசைத்தறி தொழிலாளி. இவர்களுக்கு இரண்டு மகள்கள்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற கங்காதரன், இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்களிடம் விசாரித்தும், கங்காதரன் குறித்து எந்த தகவலும் கிடைக்க-வில்லை.
இதையடுத்து, குமாரபாளையம் போலீசில், திவ்யா அளித்த புகார்-படி, காணாமல் போன கங்காதரனை போலீசார் தேடி வருகின்-றனர்.

Advertisement