படப்பை மேம்பால பணிகளை இம்மாதத்திற்குள் முடிக்க திட்டம்

படப்பை:வண்டலுார் - -வாலாஜாபாத் நெடுஞ்சாலை, படப்பை பஜார் பகுதியில் நெரிசலை குறைக்க, 26.64 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி, கடந்த 2022, ஜனவரியில் துவங்கி மந்தகதியில் நடந்து வந்தது.
தற்போது, 80 சதவீதத்திற்கு மேல் பாலம் கட்டுமான பணி நிறைவுற்ற நிலையில், சாலையில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் சாலை குறுகி, வழக்கத்தை விட இரு மடங்கு நெரிசல் அதிகரித்துள்ளது.
இதனால், வியாபாரிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வேதனைகுள்ளாகியுள்ளனர். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'படப்பை மேம்பாலம் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 85 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகளை இம்மாதம் இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கார்கே தலைமையில் காங்கிரஸ் மாநாடு: அதிருப்தி தலைவர்களும் பங்கேற்பு
-
மேகமலையில் சூழல் சுற்றுலா திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல் சுற்றுலாவின் சொர்க்க பூமியாக திகழும்
-
கல்லுாரி மாணவி மாயம்
-
'எக்ஸ்ரே' எடுத்த நோயாளிகள் பரிந்துரை பெற முடியாமல் தவிப்பு
-
பெரியகுளத்தில் நாளை பங்குனி உத்திரத் தேரோட்டம்
-
விதை நெல் விற்பனைக்கு தயார்
Advertisement
Advertisement