கோகுலம் செவிலியர் கல்லுாரியில் தேசிய அளவில் கருத்தரங்கம்

சேலம்: சேலம், கோகுலம் செவிலியர் கல்லுாரியில் தேசிய அளவில், 'செவிலிய தலைமைத்துவம் தலைவர்-களை மேம்படுத்துதல் கவனிப்பை மாற்றுதல்' தலைப்பில் கருத்த-ரங்கம் நடந்தது. செவிலியர் துறையை சேர்ந்த பல்வேறு வல்லு-னர்கள் பேசினர். அதன் நிறைவு விழாவில், கல்லுாரி மேலாண் இயக்குனர் அர்த்தனாரி தலைமை வகித்து பேசினார். தொடர்ந்து தலைமை விருந்தினராக, சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்-லுாரி இயக்குனர் கார்த்திகே யன் பேசினார். முன்னதாக கல்லுாரி முதல்வர் தமிழரசி வரவேற்றார். டாக்டர் ராஜேஸ் உடனிருந்தார்.


மேலும் கருத்தரங்கு குறித்த அறிக்கையை பேராசிரியர் சரவணன் வாசித்தார். இதில், 380க்கும் மேற்பட்ட செவிலியர்கள், செவிலி-யத்துறை சார்ந்த ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இறுதியாக கல்-லுாரி துணை முதல்வர் காமினி சார்லஸ் நன்றி தெரிவித்தார்.

Advertisement