தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் கட்டுப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

அரூர்: தென்னையில் பரவும் வெள்ளை ஈ பூச்சி தாக்குதலை கட்டுப்ப-டுத்த, வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில், ஒட்-டுண்ணி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்-ளனர்.


இது குறித்து, அரூர் அன்னை பசுமை பூமி துல்லிய பண்ணை விவசாயிகள் சங்கத் தலைவர் திருமலை கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், அரூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, அச்சல்வாடி, கீரைப்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லுார் ஆகிய பகுதிகளில் தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான மரங்கள் பாதிக்கப்பட்டதுடன், 50 சதவீதம் அளவுக்கு மகசூல் குறைந்து விட்டது. இதே நிலை நீடித்தால் தென்னை மரங்கள் அழிந்துவிடும். தென்னையில் பரவும் வெள்ளை ஈ பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, ஒரு தோட்-டத்தில் மருந்து தெளிக்கும்போது, வெள்ளை ஈக்கள், அடுத்த தோட்டத்துக்கு பரவி விடுகின்றன. எனவே, வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில், வெள்ளை ஈ தாக்குதலில் இருந்து காக்க
ஒட்டுண்ணி வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.

Advertisement