தங்கம் வென்றார் ருத்ராங்க்ஷ்: உலக துப்பாக்கி சுடுதலில்

பியுனஸ் ஏர்ஸ்: உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இந்தியாவின் ருத்ராங்க் ஷ் தங்கம் வென்றார்.
அர்ஜென்டினாவில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் பாபுதா (634.5 புள்ளி), ருத்ராங்க் ஷ் பாட்டீல் (633.7) முதலிரண்டு இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தனர். மற்ற இந்திய வீரர்களான அங்குஷ் கிரண் ஜாதவ் (631.5), திவ்யான்ஷ் சிங் பன்வார் (628.0), ஹசாரிகா (624.6) பைனலுக்கு தகுதி பெறத்தவறினர்.
அடுத்து நடந்த பைனலில் அசத்திய ருத்ராங்க் ஷ், 252.9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு இந்திய வீரர் அர்ஜுன் (144.9) 7வது இடம் பிடித்து ஏமாற்றினார்.
இதுவரை 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என, 4 பதக்கம் வென்ற இந்தியா, முதலிடத்தை சீனாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.
மேலும்
-
அறுபத்து மூவர் திருவிழா
-
அமித் ஷா நிகழ்ச்சியில் பேனர் மாறியதன் பின்னணி என்ன?
-
கூட்டணி பேரம்; கட்சித்தலைமை பொறுப்பு: அமித் ஷா -குருமூர்த்தி ஆலோசனையில் பேசியது இதுதான்!
-
பொன்முடி பேசும் போது ஸ்லிப் ஆயிருக்கும்; முட்டுக் கொடுக்கும் சட்டத்துறை அமைச்சர்
-
பொன்முடிக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையத்தில் பா.ஜ., புகார்
-
அதிக பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா: வாரணாசியில் பிரதமர் மோடி பெருமிதம்!