பிரீமியர் லீக் கிரிக்கெட்: 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி


மும்பை: பிரீமியர் லீக் கிரிக்கெட் இன்றைய போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை பெங்களூரு அணி வீழ்த்தியது.

பிரீமியர் கிரிக்கெட் 2025 தொடரின் 20வது போட்டி, மும்பை அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையே ஆன போட்டி மும்பையில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற மும்பை அணி, பந்து வீச்சு தேர்வு செய்தது.

முதலில் ஆடத்துவங்கிய, பெங்களூரு அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் விராத் கோஹ்லி களமிறங்கினர்.

இதில் பில் சால்ட் 4 ரன்களில் டிரன்ட் போல்ட் பந்தில் போல்டாகி வெளியேறினார். பட்டிதார், விராத் கோஹ்லி நிதானமாகவும் சிறப்பாக ஆட்டத்தை துவக்கினார். அவர் 42 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகள் என சிறப்பான ஆட்டத்தால் அரைசதம் கடந்து 67 ரன்களில் பாண்ட்யா பந்தில் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து படிக்கல் 37 ரன்களுடனும், லிவிங்ஸ்டோன் ரன் ஏதும் எடுக்காமலும், ஆட்டமிழந்தனர்.

ரஜத் பட்டிதார் அதிரடியாக விளையாடி, 4 சிக்ஸர்களும் 5 பவுண்டரிகள் அடித்து அரைசதம் கடந்தார்.32 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து போல்ட் பந்தில் அவுட் ஆனார்.ஜிதேஷ் சர்மா ஆட்டமிழக்காமல் 19 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். முடிவில் பெங்களூரு அணி,20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது.மும்பை அணியின் டிரண்ட் போல்ட், பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

222 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய மும்பை அணியில் ரோஹித் சர்மா 9 ரன்களிலும், ரிக்கெல்டான், 17 ரன்களிலும், வில் ஜாக் 22 ரன்களிலும், சூரியகுமார் யாதவ் 28 ரன்களிலும், திலக் வர்மா 56 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா, 42 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பெங்களூரு அணி தரப்பில் கருணாள் பாண்டியா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி 209 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

Advertisement