பணத்தை ஒப்படைத்த 'நேர்மை' வாலிபர்
திருப்பூர்; ஈரோட்டை சேர்ந்தவர் பவாஸ் அகமது, 33. இவர் சொந்த வேலை காரணமாக கோவைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது கோவை - சேலம் பைபாஸ் ரோட்டில் செங்கப்பள்ளி அருகே பேக்கரி ஒன்றில் டீ சாப்பிட சென்றார். அவர் அமர சென்ற டேபிளில், 12,700 ரூபாயை கண்டெடுத்தார்.
பணம் தொடர்பாக அங்கிருந்தவர்களிடம் விசாரித்தார். யாரும் பணம் குறித்து உரிமை கொண்டாடவில்லை. ஊத்துக்குளி போலீஸ் ஸ்டேஷனுக்கு பவாஸ் அகமது சென்றார்.
கண்டெடுத்த பணத்தை பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தார். அவரின் நேர்மையை போலீசார் பாராட்டினர். பணத்தை தவற விட்டு சென்றது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன்; தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி
-
ஏப்.11 முதல் 13 வரை பழநி கோவிலில் கட்டண தரிசனம் ரத்து!
-
10 மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு
-
ஐகோர்ட் நீதிபதிகள் 769 பேர்; சொத்து விவரம் வெளியிட்டது 95 பேர்!
-
இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலையில் சரிவு; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
கனடா அரசியலில் கலக்கும் குஜராத் வம்சாவளியினர்: 4 பேர் வேட்பாளர்களாக போட்டி
Advertisement
Advertisement